நீலகிரி : உதகையில் ஆட்டோக்கள் இயக்குவதில் பாரபாட்சம் காட்டுவதால், வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பத்துடன் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
நீலகிரி : உதகையில் ஆட்டோக்கள் இயக்குவதில் பாரபாட்சம் காட்டுவதால், வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பத்துடன் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
உதகை நகரில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் ஆட்டோ ரிக்ஷாக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதையடுத்து, உதகை நகரப் பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்க்ஹில் பகுதியில் சுமார் 12 ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளனர். நகரப் பகுதியில் இருந்து இப்பகுதிக்கு செல்லக்கூடிய இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் 90 ரூபாய் முதல் அதிகபட்சம் 100 ரூபாய் வரை எல்க்ஹில் பகுதிக்கு வாடகைக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் எல்க்ஹில் பகுதியில் இருந்து நகர்ப்பகுதிக்கு வரும் எந்தவொரு வாடகையையும் எடுக்கக் கூடாது என எல்க்ஹில் பகுதி ஆட்டோ ஓட்டுநர்களை நகரப்பகுதியில் இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மிரட்டியுள்ளனர். மேலும், எல்க்ஹில் பகுதியில் தனியாக ஆட்டோ ஸ்டேண்ட் போடக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், எல்க்ஹில் பகுதியில் இருந்து வாடகைக்கு ஆட்டோ ஓட்டும் ஓட்டுநர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

எனவே, ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரங்கள் நகரப் பகுதியில் இருந்து வாடகை எடுத்துச் செல்வதில் தான் இருக்கிறது எனக் கூறி, இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என எல்க்ஹில் பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து கோரிக்கை மனு அளித்தனர்.
உதகை நகரில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் ஆட்டோ ரிக்ஷாக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதையடுத்து, உதகை நகரப் பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்க்ஹில் பகுதியில் சுமார் 12 ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளனர். நகரப் பகுதியில் இருந்து இப்பகுதிக்கு செல்லக்கூடிய இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் 90 ரூபாய் முதல் அதிகபட்சம் 100 ரூபாய் வரை எல்க்ஹில் பகுதிக்கு வாடகைக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் எல்க்ஹில் பகுதியில் இருந்து நகர்ப்பகுதிக்கு வரும் எந்தவொரு வாடகையையும் எடுக்கக் கூடாது என எல்க்ஹில் பகுதி ஆட்டோ ஓட்டுநர்களை நகரப்பகுதியில் இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மிரட்டியுள்ளனர். மேலும், எல்க்ஹில் பகுதியில் தனியாக ஆட்டோ ஸ்டேண்ட் போடக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், எல்க்ஹில் பகுதியில் இருந்து வாடகைக்கு ஆட்டோ ஓட்டும் ஓட்டுநர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

எனவே, ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரங்கள் நகரப் பகுதியில் இருந்து வாடகை எடுத்துச் செல்வதில் தான் இருக்கிறது எனக் கூறி, இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என எல்க்ஹில் பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து கோரிக்கை மனு அளித்தனர்.