மேட்டுப்பாளையம் அருகே டெம்போ மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி

கோவை : மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் டெம்போவும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவை : மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் டெம்போவும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேவாங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். கூலி தொழிலாளியான இவர் கருவேப்பிலை வெட்டும் தொழிலுக்கு சென்று வருகிறார். இன்று வழக்கம் போல் பணிக்கு சென்று விட்டு மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் தேரம்பாளையம் அருகே வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்குள்ள சாலை வளைவில் வாகனத்தை தங்கராஜ் திருப்பிய போது, எதிரே வெங்காயம் ஏற்றி வந்த டெம்போவின் பக்கவாட்டில் மோதினார். இதில், தலைப்பகுதியில் பலத்த காயம் அடைந்த தங்கராஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போக்குவரத்து விதிகளை மதிக்காமல், தலைக்கவசம் அணியாததால் இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த தங்கராஜ் உயிரிழக்க நேரிட்டது. விபத்து குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இருசக்கர வாகனங்களில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்பை தடுக்க கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...