கோவை : கோவை – பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் குறிச்சி அருகே ஆக்கிரமிப்பு செய்வதர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கினர்.
கோவை : கோவை – பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் குறிச்சி அருகே ஆக்கிரமிப்பு செய்வதர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கினர்.

கோவை – பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது 30 அடியாக உள்ள சாலையை 50 அடியாக விரிவாக்கம் செய்ய சாலை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இந்த நிலையில், கோவை குறிச்சி குளம் அருகே உள்ள பொள்ளாச்சி சாலையின் ஓரங்களில் உள்ள பழைய இரும்பு கடை, கிரானைட் கடை, பழைய மர சாமான்கள் விற்கும் கடையினர் பொள்ளாச்சி சாலையை ஆக்கிரமித்து தங்கள் பொருட்களை சாலை ஓரங்களில் வைத்துள்ளனர். இதனால், அங்கு விபத்து ஏற்படுவதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், திடீரென போத்தனூர் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் குறிச்சி அருகே குவிக்கப்பட்டனர், பின்னர், சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கோரி நோட்டீஸ்களை வழங்கினர். மேலும், சாலையை ஆக்கிரமித்து பொருட்கள் வைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். தற்போது, 30 அடியாக உள்ள சாலையை ஆக்கிரமிப்புகள் அகற்றிய உடன் 50 அடியாக விரிவாக்கம் செய்யும் பணி துவங்க உள்ளது, மேலும், குறிச்சி குளம் அருகே புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான செயல் திட்ட பணிகளும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கோவை – பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது 30 அடியாக உள்ள சாலையை 50 அடியாக விரிவாக்கம் செய்ய சாலை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இந்த நிலையில், கோவை குறிச்சி குளம் அருகே உள்ள பொள்ளாச்சி சாலையின் ஓரங்களில் உள்ள பழைய இரும்பு கடை, கிரானைட் கடை, பழைய மர சாமான்கள் விற்கும் கடையினர் பொள்ளாச்சி சாலையை ஆக்கிரமித்து தங்கள் பொருட்களை சாலை ஓரங்களில் வைத்துள்ளனர். இதனால், அங்கு விபத்து ஏற்படுவதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், திடீரென போத்தனூர் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் குறிச்சி அருகே குவிக்கப்பட்டனர், பின்னர், சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கோரி நோட்டீஸ்களை வழங்கினர். மேலும், சாலையை ஆக்கிரமித்து பொருட்கள் வைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். தற்போது, 30 அடியாக உள்ள சாலையை ஆக்கிரமிப்புகள் அகற்றிய உடன் 50 அடியாக விரிவாக்கம் செய்யும் பணி துவங்க உள்ளது, மேலும், குறிச்சி குளம் அருகே புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான செயல் திட்ட பணிகளும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.