சிமி விவகாரம் : விசாரணைக்கு யாரும் வராததால் கூட்டம் ஒரு மணிநேரத்தில் நிறைவு

நீலகிரி : சிமி' தடை நீட்டிப்பு குறித்து தீர்ப்பாயத்தின் மூன்றாம் நாள் விசாரணையில் எந்த மனுக்களும், விசாரணைக்கு நபர்களும் ஆஜராகாததால் குன்னூரில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒரு மணிநேரத்தில் முடிக்கப்பட்டது.

நீலகிரி : சிமி' தடை நீட்டிப்பு குறித்து தீர்ப்பாயத்தின் மூன்றாம் நாள் விசாரணையில் எந்த மனுக்களும், விசாரணைக்கு நபர்களும் ஆஜராகாததால் குன்னூரில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒரு மணிநேரத்தில் முடிக்கப்பட்டது.



'சிமி' எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு 1977-ல் துவங்கப்பட்டது. இந்த அமைப்பு பல்வேறு நாசகர செயல்களில் ஈடுபட்டதையடுத்து, 2001-ல் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. அப்போது முதலே, இந்த அமைப்பு மீதான தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக, 2014ல் ஐந்தாண்டு தடை நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த தடை உத்தரவு கடந்த ஜனவரி 31-ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, 'சிமி' அமைப்பின் மீதான தடை நீட்டிக்கப்படுமா என்பது குறித்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா தலைமையிலான தீர்ப்பாயம் சனிக்கிழமை முதல் இன்று வரை 3 நாட்கள் குன்னூரில் விசாரணை மேற்கொண்டது. 



இதில், குஜராத், ஜார்கண்ட், தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த குற்றப்பிரிவு, பயங்கரவாத தடுப்பு பிரிவு, மாநில உளவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இன்று நடைபெற்ற விசாரணையில் மனுக்கள் கொடுக்க யாரும் முன் வராததால் ஒரு மணி நேரத்தில் தீர்ப்பாய நீதிபதி மற்றும் அதிகாரிகள் அவையில் இருந்து சென்றனர். 'சிமி' அமைப்பினர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவர்கள் மீதான தடை விலக்கப்பட்டால், பல தேச விரோத செயல்களில் அவர்கள் ஈடுபடும் அபாயம் உள்ளதாகவும் கூறி தீர்ப்பாயம் முன் கடந்த இரண்டு நாட்களில் 9 மனுக்கள் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...