மாநகராட்சி பள்ளிக்கு தனியார் பெயர் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் ஆட்சியரிடம் மனு

திருப்பூர் : திருப்பூரில் தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்ட மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு தனியார் பெயர் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் : திருப்பூரில் தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்ட மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு தனியார் பெயர் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



திருப்பூர் ராயபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த மாநகராட்சி நடுநிலைப் பள்ளி திருப்பூர் பிரைம் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ. 75 லட்சம் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், பள்ளி திறப்பு விழா கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது, துரோணா பாடசாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி என பெயர் வைக்கப்பட்டிருந்தது. தனியார் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்ட பள்ளியாக இருந்தாலும், மாநகராட்சி பள்ளிக்கு தனியார் பெயர் சூட்டப்பட்டிருப்பது ராயபுரம் பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...