கோவை : தனியார் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
கோவை : தனியார் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு அரசு வாகனங்கள் ஊழியர்களின் வாகனம் நிறுத்த அனுமதிக்கப்பட்ட நிலையில், இங்கு தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவது வாடிக்கையாகி விட்டது. ரயில் மூலம் திருப்பூர் ,ஈரோடு மற்றும் கோவை சுற்றுப்புற பகுதிகளில் பணிக்கு செல்லும் பெரும்பாலானோர் தங்களது வாகனங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விட்டு சென்று விடுவதால் இங்கு நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு சென்றதையடுத்து, வெளி ஆட்களின் வாகனங்களை ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க பந்தய சாலை காவல் ஆய்வாளரிடம் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வலியுறுத்தினார்.


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு அரசு வாகனங்கள் ஊழியர்களின் வாகனம் நிறுத்த அனுமதிக்கப்பட்ட நிலையில், இங்கு தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவது வாடிக்கையாகி விட்டது. ரயில் மூலம் திருப்பூர் ,ஈரோடு மற்றும் கோவை சுற்றுப்புற பகுதிகளில் பணிக்கு செல்லும் பெரும்பாலானோர் தங்களது வாகனங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விட்டு சென்று விடுவதால் இங்கு நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு சென்றதையடுத்து, வெளி ஆட்களின் வாகனங்களை ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க பந்தய சாலை காவல் ஆய்வாளரிடம் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வலியுறுத்தினார்.
