கோவை : மேட்டுப்பாளையத்தில் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், குடி தண்ணீர் சாலையில் வீணாகியது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : மேட்டுப்பாளையத்தில் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், குடி தண்ணீர் சாலையில் வீணாகியது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் கிராமங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. காரமடை பேரூராட்சிக்கு தேக்கம்பட்டி பகுதியில் தனி நீர் ஏற்றும் நிலையம் அமைக்கப்பட்டு நாள்தோறும் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சாலைகளின் ஓரங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு அதன் மூலம் அனைத்து வார்டுகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மேட்டுப்பாளையம் - கோவை சாலையானது விரிவாக்கப் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக காரமடை அருகே டீச்சர்ஸ் காலனி பகுதியில் சாலைகளை விரிவுபடுத்த ஜே.சி.பி. உதவியுடன் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் சாலையின் ஓரம் குளிதோண்டிய போது, ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீரிட்டு சாலையில் ஓடியது. காரமடை பேரூராட்சிக்கு வழங்கப்படும் குடிநீர் சுமார் 3 மணி நேரமாக ஆறாக சாலையில் ஓடியும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் ஓடியது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறியதையடுத்து, தண்ணீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பேரூராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்ட கேட்டபோது, "உடைப்பு பகுதியினை பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்," என தெரிவித்தனர்.
தமிழகமே தண்ணீருக்காக தவம் இருக்கும் நிலையில், அதிகாரிகளின் அலட்சியத்தால் சுமார் 3 மணி நேரம் குடிதண்ணீர் வீணானது பொதுமக்களை கவலையடையச் செய்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் கிராமங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. காரமடை பேரூராட்சிக்கு தேக்கம்பட்டி பகுதியில் தனி நீர் ஏற்றும் நிலையம் அமைக்கப்பட்டு நாள்தோறும் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சாலைகளின் ஓரங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு அதன் மூலம் அனைத்து வார்டுகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மேட்டுப்பாளையம் - கோவை சாலையானது விரிவாக்கப் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக காரமடை அருகே டீச்சர்ஸ் காலனி பகுதியில் சாலைகளை விரிவுபடுத்த ஜே.சி.பி. உதவியுடன் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் சாலையின் ஓரம் குளிதோண்டிய போது, ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீரிட்டு சாலையில் ஓடியது. காரமடை பேரூராட்சிக்கு வழங்கப்படும் குடிநீர் சுமார் 3 மணி நேரமாக ஆறாக சாலையில் ஓடியும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் ஓடியது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறியதையடுத்து, தண்ணீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பேரூராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்ட கேட்டபோது, "உடைப்பு பகுதியினை பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்," என தெரிவித்தனர்.
தமிழகமே தண்ணீருக்காக தவம் இருக்கும் நிலையில், அதிகாரிகளின் அலட்சியத்தால் சுமார் 3 மணி நேரம் குடிதண்ணீர் வீணானது பொதுமக்களை கவலையடையச் செய்துள்ளது.