பிரபல ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி சூலூர் அருகே விபத்தில் பலி : தப்பியோடிய சகோதரருக்கு வலைவீச்சு

கோவை : மதுரையில் பிரபல ரவுடியை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி சூலூர் அருகே சாலை விபத்தில் பலியான நிலையில், அவருடன் வாகனத்தில் வந்து தப்பியோடிய அவரது சகோதரரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை : மதுரையில் பிரபல ரவுடியை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி சூலூர் அருகே சாலை விபத்தில் பலியான நிலையில், அவருடன் வாகனத்தில் வந்து தப்பியோடிய அவரது சகோதரரை போலீசார் தேடி வருகின்றனர். 

கடந்த மாதம் மதுரை பழங்காநத்தம் அடுத்த முத்துப்பட்டி பகுதியில் பிரபல ரவுடி சௌந்தரை 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி கழுத்தை வெட்டியது. மேலும், செளந்தரின் தலையை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் எடுத்துச் சென்று அங்குள்ள ரயிவே தண்டவாளம் அருகே வீசிவிட்டு தப்பிச் சென்றது. இந்த சம்பவம் மதுரை மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய 5-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். ஆனால், முக்கிய குற்றவாளியான செல்வம் தலைமறைவாகிவிட்டதால், தனிப்படை அமைத்து போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில், செல்வம் தனது சகோதரர் சோனய் மற்றும் நண்பர் ஆகியோருடன் சூலூர் கண்ணம்பாளையம் அருகே அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த வாகனம் மோதியதில் மூன்று பேரும் காயமடைந்தனர். இதையடுத்து, இவர்களை அருகே உள்ளவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, செல்வம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். பின்னர், செல்வத்தின் சகோதரர் காவல்துறைக்கு பயந்து தப்பியோடி விட்டார். மேலும், ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே, செல்வத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இறந்த தனது சகோதரரின் பிரேதத்தை வாங்க இன்று தேடப்பட்டு வரும் சோனய் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வரும்பொழுது போலீசார் அவரை கைது செய்வார்கள் என காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...