திருப்பூர் : திருப்பூர் அருகே பொது மக்களுக்கு இடையூறாகவும், மாசு ஏற்படுத்தி வரும் சாய ஆலைகள், பிரிண்டிங் நிறுவனங்கள் மற்றும் பாய்லர்கள் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சார்பில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
திருப்பூர் : திருப்பூர் அருகே பொது மக்களுக்கு இடையூறாகவும், மாசு ஏற்படுத்தி வரும் சாய ஆலைகள், பிரிண்டிங் நிறுவனங்கள் மற்றும் பாய்லர்கள் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சார்பில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரைப்புதூர் பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அப்பகுதியை சுற்றியுள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சாயப்பட்டறை நிறுவனங்கள், பிரிண்டிங் நிறுவனங்களும் சுத்திகரிக்கப்படாத ஜீரோ டிஸ்சார்ஜ் செய்யாத கழிவு நீரை கிணறு, போர் மற்றும் ஓடைகளில் வெளியேற்றுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், பாய்லர் நிறுவனங்களிலிருந்து கருப்பு துகள்கள் வெளியேற்றப்படுவதால், சுவாச கோளாறு போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, கரைப்புதூர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூராகவும், நோய் பரப்பும் சாய ஆலை நிறுவனங்கள், பிரிண்டிங்.நிறுவனங்கள், பாய்லர் ஆலைகளை உடனடியாக மூட வலியுறுத்தி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தைக் கண்டித்து அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கரைப்புதூர் வாழைத்தோட்டம் பகுதியில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரைப்புதூர் பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அப்பகுதியை சுற்றியுள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சாயப்பட்டறை நிறுவனங்கள், பிரிண்டிங் நிறுவனங்களும் சுத்திகரிக்கப்படாத ஜீரோ டிஸ்சார்ஜ் செய்யாத கழிவு நீரை கிணறு, போர் மற்றும் ஓடைகளில் வெளியேற்றுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், பாய்லர் நிறுவனங்களிலிருந்து கருப்பு துகள்கள் வெளியேற்றப்படுவதால், சுவாச கோளாறு போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, கரைப்புதூர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூராகவும், நோய் பரப்பும் சாய ஆலை நிறுவனங்கள், பிரிண்டிங்.நிறுவனங்கள், பாய்லர் ஆலைகளை உடனடியாக மூட வலியுறுத்தி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தைக் கண்டித்து அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கரைப்புதூர் வாழைத்தோட்டம் பகுதியில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.