கோவை : கோவையில் சிந்தி அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 150 பேருக்கு இலவசமாக பொய் பல் செட்டுக்களை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் வழங்கினார். இந்த நிகழ்ச்சி லிம்கா புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
கோவை : கோவையில் சிந்தி அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 150 பேருக்கு இலவசமாக பொய் பல் செட்டுக்களை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் வழங்கினார். இந்த நிகழ்ச்சி லிம்கா புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
ஒரு புன்னகையை இலவசமாக வழங்குவோம் என்ற நிகழ்ச்சியை கோவையை சேர்ந்த ‘சிந்தி போரம்’ அமைப்பு கோவை குஜராத்தி சமாஜ்ஜில் நேற்று நடத்தியது. சஞ்சாய் சப்ரியா தலைமையிலான சிந்தி போரம் அமைப்பு, மங்களூரை சேர்ந்த ஏ.பி. ஷெட்டி நினைவு பல் அறிவியல் நிறுவனம், ஆர்.வி. எஸ் மருந்து கல்லுாரி மற்றும் மருத்துவமனை ஆகியவை இணைந்து முகாமை நடத்தின. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் துவக்கி வைத்தார்.

பொதுவாக செயற்கையான ஒரு பல் செட் செய்ய 5 நாட்கள் ஆகும். ஆனால், முதல் முறையாக 150 பேருக்கு ஒரே நாளில் பற்கள் செய்ய அளவீடு செய்து, ஒரே நாளில் பொருத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். கோவை நகரில் பல்வேறு இடங்களில் 500 பேரை ஆராய்ந்து, பல் செட் பொருத்த தகுதியானவர்கள் 150 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த பணியில், டாக்டர்கள், பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட 250 பேர் கொண்ட குழு 18 மணி நேரம் ஈடுபட்டது. இந்த சாதனை, லிம்கா புத்தகத்திலும் இடம் பிடித்தது.

கோவையைச் சேர்ந்த சிந்தி சமுதாய அமைப்பு நடத்திய இந்த முகாமிற்கு, பெங்களூரைச் சேர்ந்த ஏபி ஷெட்டி நினைவு பல் அறிவியல் நிறுவன பணியாளர்கள், ஆர்.வி.எஸ் மருந்து கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகியவை தாமாக முன்வந்து உதவியது குறிப்பிடத்தக்கது.