கோவை : 1990-ம் ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் விருப்ப நாடகமான 'மர்மதேசம் விடாது கருப்பு' நாடகம் யூடியூப்பில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.
கோவை : 1990-ம் ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் விருப்ப நாடகமான 'மர்மதேசம் விடாது கருப்பு' நாடகம் யூடியூப்பில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.
கிராமப்புற வழிபாட்டு முறையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திகில் வாய்ந்த நாடகம் மர்மதேசம் விடாது கருப்பு. இந்திரா சவுந்தரராஜனின் திரைக்கதை மற்றும் வசனத்தில் உருவாக்கப்பட்ட இந்த நாடகம் முதல்முறையாக சன் டிவியில் 1995-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்டது. பின்னர், ராஜ் டிவி மற்றும் வசந்த் டிவிக்களில் திரையிடப்பட்டது. டைட்டில் வீடியோவிலேயே 1990-ம் ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளிடத்தில் பெரும் பயத்தை ஏற்படுத்தும் அளவிற்கு பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டிருந்தது. எனவே, இது பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், இந்த நாடகம் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை நாள்தோறும் கவிதாலயா பிரடக்ஷனின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. ஏற்கனவே, 10 பாகங்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.