கோவை : பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் கோவையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கோவை : பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் கோவையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவமானது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை கோவை மாவட்ட போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர், சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த சில நாட்களாக சி.பி.ஐ. போலீசார், பாதிக்கப்பட்ட பெண்கள், குற்றம் சுமத்தப்பட்டவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அதேபோல, பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரின் வீடுகளில் ரகசியமாக சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் விரைவாக விசாரணை மேற்கொண்டு வரும் சி.பி.ஐ. போலீசார் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் மற்றும் மணிவண்ணன் ஆகிய 5 பேரும் சேலம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு காரணத்திற்காக மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவமானது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை கோவை மாவட்ட போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர், சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த சில நாட்களாக சி.பி.ஐ. போலீசார், பாதிக்கப்பட்ட பெண்கள், குற்றம் சுமத்தப்பட்டவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அதேபோல, பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரின் வீடுகளில் ரகசியமாக சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் விரைவாக விசாரணை மேற்கொண்டு வரும் சி.பி.ஐ. போலீசார் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் மற்றும் மணிவண்ணன் ஆகிய 5 பேரும் சேலம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு காரணத்திற்காக மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.