கோவை : அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறும் குடிமை ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ‘லைப் சர்ட்டிபிகேட்’-ஐ ஜீலைக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை : அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறும் குடிமை ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ‘லைப் சர்ட்டிபிகேட்’-ஐ ஜீலைக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநில அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறும். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான 2019-2020ஆம் ஆண்டுக்கான நேர்காணல் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோவை மாவட்ட கருவூலம் மற்றும் சார் கருவூலங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை நேர்காணலுக்கு ஆஜராகாத ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உடனடியாக தாங்கள் சார்ந்துள்ள கருவூலத்துக்கு வந்து தங்கள் வருகையைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு நேர்காணலுக்கு வராதவர்கள் ஓய்வூதியம் ஆகஸ்டு முதல் நிறுத்திவைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மாநில அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறும். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான 2019-2020ஆம் ஆண்டுக்கான நேர்காணல் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோவை மாவட்ட கருவூலம் மற்றும் சார் கருவூலங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை நேர்காணலுக்கு ஆஜராகாத ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உடனடியாக தாங்கள் சார்ந்துள்ள கருவூலத்துக்கு வந்து தங்கள் வருகையைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு நேர்காணலுக்கு வராதவர்கள் ஓய்வூதியம் ஆகஸ்டு முதல் நிறுத்திவைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.