நீலகிரி :தடை செய்யப்பட்ட சிமி அமைப்பு குறித்து குன்னூரில் நாளை முதல் 3 நாட்களுக்கு கருத்து தெரிவிக்கலாம் என நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
நீலகிரி :தடை செய்யப்பட்ட சிமி அமைப்பு குறித்து குன்னூரில் நாளை முதல் 3 நாட்களுக்கு கருத்து தெரிவிக்கலாம் என நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
இந்திய இஸ்லாமிய மாணவர்களின் இயக்கம் (சிமி) கடந்த 1977ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தை மத்திய அரசு தீவிரவாத இயக்கம் என்று அறிவித்து, 2002ஆம் ஆண்டு தடை செய்தது. இந்த நிலையில், சிமி இயக்கம் மீதான தடையை நீக்குவது அல்லது நீடிப்பது குறித்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா தலைமையில் அமைக்கப்பட்ட சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயத்தின் அமர்வு நாளை முதல் 24ம் தேதி வரை 3 நாட்கள் குன்னூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் விசாரணை நடத்த உள்ளது.
இந்த நிலையில், இதுதொடர்பாக சாட்சியம் அளிக்க விரும்பும் நபர்கள் மேற்கண்ட நாட்களில் தீர்ப்பாயத்தின் முன்பு ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். சிமி இயக்கம் மீதான தடை குறித்து விசாரணை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குன்னூரில் நடந்தது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறும் விசாரணையில் டெல்லியில் இருந்து மத்திய அரசு வழக்கறிஞர்களும், இந்து முன்னணி சார்பில் கோவை மற்றும் குன்னூரில் இருந்து வழக்கறிஞர்களும் ஆஜராகவுள்ளனர்.
இந்திய இஸ்லாமிய மாணவர்களின் இயக்கம் (சிமி) கடந்த 1977ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தை மத்திய அரசு தீவிரவாத இயக்கம் என்று அறிவித்து, 2002ஆம் ஆண்டு தடை செய்தது. இந்த நிலையில், சிமி இயக்கம் மீதான தடையை நீக்குவது அல்லது நீடிப்பது குறித்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா தலைமையில் அமைக்கப்பட்ட சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயத்தின் அமர்வு நாளை முதல் 24ம் தேதி வரை 3 நாட்கள் குன்னூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் விசாரணை நடத்த உள்ளது.
இந்த நிலையில், இதுதொடர்பாக சாட்சியம் அளிக்க விரும்பும் நபர்கள் மேற்கண்ட நாட்களில் தீர்ப்பாயத்தின் முன்பு ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். சிமி இயக்கம் மீதான தடை குறித்து விசாரணை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குன்னூரில் நடந்தது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறும் விசாரணையில் டெல்லியில் இருந்து மத்திய அரசு வழக்கறிஞர்களும், இந்து முன்னணி சார்பில் கோவை மற்றும் குன்னூரில் இருந்து வழக்கறிஞர்களும் ஆஜராகவுள்ளனர்.