கோவை : மேட்டுப்பாளையத்தில் 9-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை : மேட்டுப்பாளையத்தில் 9-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். பெற்றோர்கள் இருவரும் கூலி வேலைக்கு செல்வதால், காலையில் சென்றால் மாலை தான் வீடு திரும்புவர். இந்த நிலையில், மாணவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அதே பகுதியினை சேர்ந்த வினீத் குமார் என்ற வாலிபர் தனிமையில் இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சல் இடவே அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பின்னர், இரவு வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் மாணவி நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதனையடுத்து, மாணவியின் தாயார் இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையில் புகார் அளித்தார். அதன் பேரில், விசாரணை நடத்திய அனைத்து மகளிர் காவல்துறையினர் மாணவியிடம் அத்துமீறி பாலியில் சீண்டலில் ஈடுபட்ட வினீத் குமார் என்ற வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். பெற்றோர்கள் இருவரும் கூலி வேலைக்கு செல்வதால், காலையில் சென்றால் மாலை தான் வீடு திரும்புவர். இந்த நிலையில், மாணவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அதே பகுதியினை சேர்ந்த வினீத் குமார் என்ற வாலிபர் தனிமையில் இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சல் இடவே அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பின்னர், இரவு வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் மாணவி நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதனையடுத்து, மாணவியின் தாயார் இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையில் புகார் அளித்தார். அதன் பேரில், விசாரணை நடத்திய அனைத்து மகளிர் காவல்துறையினர் மாணவியிடம் அத்துமீறி பாலியில் சீண்டலில் ஈடுபட்ட வினீத் குமார் என்ற வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.