கோவை : ஆசியாவின் மிகப்பெரிய சர்க்கஸான ஜம்போ சர்க்கஸ் கோவையில் வ.உ.சி. மைதானத்தில் நாளை முதல் 40 நாட்களுக்கு நடக்கிறது.
கோவை : ஆசியாவின் மிகப்பெரிய சர்க்கஸான ஜம்போ சர்க்கஸ் கோவையில் வ.உ.சி. மைதானத்தில் நாளை முதல் 40 நாட்களுக்கு நடக்கிறது.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. சர்க்கஸ் நிகழ்ச்சி குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது :- நாளை துவங்கும் இந்த சர்க்கஸ் அடுத்த 40 நாட்களுக்கு நடைபெறும். துவக்க விழாவில் சட்டமன்ற உறுப்பினர் அம்மன்.அர்ஜுனன், வீடியோ ஸ்பெக்ட்ரம் உரிமையாளர் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளனர். தினமும் மதியம் 1 மணி, மாலை 3 மணி, இரவு 7 மணி என மூன்று காட்சிகள் நடைபெறும். ரூ. 100 - முதல் ரூ. 400 வரையில் நான்கு வகையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், முன்பதிவு செய்ய விரும்புவார்கள் [email protected] என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், ஒரு காட்சியில் 1,500 பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில், வெளிநாட்டு கலைஞர்கள் உள்பட 150 கலைஞர்கள் பங்கேற்க இருக்கின்றனர். ரங்க ராட்டினம், ரிங் டான்ஸ், துப்பாக்கி சுடுதல், குதிரை சாகசம் என பல்வேறு சாகசங்களைக் கலைஞர்கள் நிகழ்த்த உள்ளனர். இது பார்வையாளர்கள் கண்களுக்கு விருந்தாக அமையும், என்றனர்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, வீடியோ ஸ்பெக்ட்ரம் உரிமையாளர் செல்வராஜ், சைக்கிள் கலைஞர் ஜானகி, துப்பாக்கி சுடும் கலைஞர் ஷாந்து பாண்டே, கிளிகள் சாகச கலைஞர் ரீனா குப்தா, மேலாளர் தினேஷ், செய்தி தொடர்பாளர் சுபா.சுப்ரமணியம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.