கோவை: தூத்துக்குடியில் பாலிமர் தொலைக்காட்சி நிருபர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து கோவை மாவட்ட அனைத்து பத்திரிகையாளர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: தூத்துக்குடியில் பாலிமர் தொலைக்காட்சி நிருபர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து கோவை மாவட்ட அனைத்து பத்திரிகையாளர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தி பதிவிட்டதற்காக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் பாலிமர் நியூஸ் தொலைக்காட்சி நிருபர் முத்துவேல் மீது கூலி படையினரால் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு பத்திரிகையாளர் சங்க அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட அனைத்து பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பினர் சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய மாநில அரசுகள் தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், முத்துவேல் மீது தாக்குதல் நடத்த தூண்டிய காவல் ஆய்வாளர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் வலியுறுத்தினர்.