நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க. மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோவை : நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தி.மு.க. மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை : நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தி.மு.க. மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மும்மொழி கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும், கிராமப்புற மாணவர்களுக்கு வாகன வசதி செய்து தர வேண்டும், இந்தி திணிப்பைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை டாடாபாத்தில் தி.மு.க. மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் மனோஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் புதிய கல்வி கொள்கையைக் கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. 



போராட்டத்தின் போது, மாணவரணி அமைப்பாளர் மனோஜ்குமார் கூறுகையில், "நீட் தேர்வில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், புதிய கல்வி கொள்கையால் மாணவர்களின் சுமை அதிகரித்துள்ளது. மும்மொழி கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும், இந்த கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாவிட்டால், தி.மு.க. தலைமையின் ஆலோசனையின் பேரில் போராட்டங்கள் தொடரும்," என கூறினார். 

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...