கோவை மாநகர காவல்துறை சார்பில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் ரத்த தானம்

கோவை : தமிழக முதலமைச்சரின் இரத்ததான திட்டத்தின் கீழ் கோவை மாநகர காவல்துறை சார்பில் கோவை புதூர் அருகே 600-க்கும் மேற்பட்ட போலீசார் ஆர்வத்துடன் இரத்த தானம் செய்தனர்.

கோவை : தமிழக முதலமைச்சரின் இரத்ததான திட்டத்தின் கீழ் கோவை மாநகர காவல்துறை சார்பில் கோவை புதூர் அருகே 600-க்கும் மேற்பட்ட போலீசார் ஆர்வத்துடன் இரத்த தானம் செய்தனர். 

ஆபத்தான சூழலில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மனிதனுக்கு தேவைப்படும் இரத்தத்தை மற்றொரு சக மனிதர் தானமாக அளிப்பது இரத்ததானம் ஆகும். அதேபோல, இன்றைய காலகட்டத்தில் இரத்தத்தின் தேவைகள் அதிகமாக உள்ள சூழலில், இரத்த கொடையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த இரத்த கொடையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களும் விழிப்புணர்வு நிகழ்வுகளை ஆண்டு முழுவதும் நடத்தி வருகின்றனர். இந்த விழிப்புணர்வின் பயனாக ஆண், பெண் என பாகுபாடுகள் இன்றி அனைவரும் இரத்ததானம் செய்து வருகின்றனர்.



இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் இரத்ததான திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் இரத்த தானம் செய்யப்படுகிறது. குறிப்பாக, தமிழக காவல்துறையின் சார்பில் தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று ரத்த தானம் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர காவல்துறை சார்பில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் கோவை புதூரில் உள்ள சிறப்பு காவல் படை முகாமில் இரத்த தானம் செய்தனர். இந்த இரத்ததான முகாமினை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் டாக்டர் அசோகன் மற்றும் துணை ஆணையாளர் எல். பாலாஜி சரவணன் ஆகியோர் துவங்கி வைத்தனர்.



அதேபோல, காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் துணை ஆணையாளர் எல். பாலாஜி சரவணன் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளும் ஆர்வத்துடன் இரத்ததானம் செய்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...