கோவை : அருணாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த கோவை விமானப்படை வீரர் வினோத்தின் உடலுக்கு சூலூர் விமான படைத்தளத்தில் விமானப்படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தி, அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
கோவை : அருணாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த கோவை விமானப்படை வீரர் வினோத்தின் உடலுக்கு சூலூர் விமான படைத்தளத்தில் விமானப்படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தி, அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

அசாமில் இருந்து கடந்த 3-ம் தேதி, 13 பேருடன் புறப்பட்டு சென்ற விமானப்படைக்கு சொந்தமான ஏ.என். 32 ரக போர் விமானம், அருணாச்சலப் பிரதேசத்தின் சியாங் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது. அதில், பயணித்த 13 பேரும் உயிரிழந்த நிலையில், அவர்களின் தகவல்களை விமானப்படை வெளியிட்டிருந்தது. அந்த புகைப்படங்களில் கோவையைச் சேர்ந்த வினோத் ஹரிஹரன் என்பவரும் இடம் பெற்றிருந்தார்.

இந்த நிலையில், விமான விபத்தில் உயிரிழத்த கோவையை சேர்ந்த வினோத் ஹரிஹரனின் உடல் சூலூர் விமானப் படைத்தளத்திற்கு இன்று காலை கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, சிங்காநல்லூரில் உள்ள வினோத்தின் இல்லத்தில் அவரது உடலை ராணுவ வீரர்கள் முறைப்படி ஒப்படைத்தனர். சுமார் 12 மணி அளவில் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட உள்ளது.