சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் 1,000 பள்ளி மாணவர்களின் யோகா நிகழ்ச்சி

கோவை : மேட்டுப்பாளையத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகள் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து யோகாசனம் செய்து அசத்தினர்.

கோவை : மேட்டுப்பாளையத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகள் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து யோகாசனம் செய்து அசத்தினர்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாரில் செயல்படும் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் இன்று உலக யோக தினத்தை முன்னிட்டு நடத்தபட்ட இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் ஆயிரம் பேர் ஒரே இடத்தில் கூடி யோகாசனம் செய்து அசத்தினர். சிந்தனை கவிஞர் டாக்டர் கவிதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள் என அனைவரும் அதிகாலை பள்ளி மைதானத்தில் கூடி இயற்கையான சூழல் மிகுந்த கல்லாரில் சூரிய நமஸ்காரத்தில் துவங்கி பத்மாசனம், புஜங்காசனம், சலபாசனம், தனுராசனம், சர்வாங்க ஆசனம், மச்சானம், யோகமுத்ரா என பல்வேறு ஆசனங்களின் மூலம் தங்களது உடலை வளைத்து செய்து காண்பித்தது அனைவரையும் ஆச்சரியப்படும் அளவுக்கு இருந்தது. 



குறிப்பாக, சிறுவர்கள் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட இடைவெளி விட்டு தனித்தனியாக அணிவகுத்து யோகாசனம் செய்தனர். மாணவர்களின் மன வலிமையும் உடல் ஆரோக்கியத்தையும் பெற தினந்தோறும் யோகாசனம் செய்வதால், நமது உடல் மட்டுமின்றி மனதும் புத்துணர்வு அடையும். அத்துடன் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ அனைவரும் யோகா செய்ய இந்நிகழ்ச்சியில் உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...