5-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா யோகா மையம் சார்பில் உலகம் முழுவதும் சுமார் 1,500 இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நாளை நடைபெற உள்ளன.
5-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா யோகா மையம் சார்பில் உலகம் முழுவதும் சுமார் 1,500 இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நாளை நடைபெற உள்ளன.
ஈஷா யோகா மையம் சார்பில் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, உலகம் முழுவதும் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்தாண்டு இந்தியா, அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, ரஷ்யா, ஆப்ரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 1,500 இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைபெற உள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் யோகா வகுப்புகள் நடைபெற உள்ளன. இதில், ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை கடந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், இந்திய ராணுவ வீரர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் என பலத் தரப்பைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு யோகா ஆசிரியர்கள் மூலம் ‘உப-யோகா’ என்ற யோகா பயிற்சி சொல்லிக் கொடுக்கப்பட உள்ளது.
இதன் ஒருபகுதியாக, அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஃப்ளோட்டிங் டாக் எனப்படும் இந்திய கடற்படையின் மிதக்கும் துறைமுகத்தில் யோகா தின நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இதில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குமற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தலைமையகத்தின் தலைமை தளபதி, கடற்படை உதவி தலைவர் பிமல் வர்மா பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில், இந்திய தரைப்படை, கடற்படை, விமானப் படை மற்றும் கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் உட்பட சுமார் 1000 பேருக்கு யோகா கற்றுக்கொடுக்கப்பட உள்ளது.
இதை தொடர்ந்து, பிற்பகலில் ராணுவ அதிகாரிகளுடன் சத்குரு கலந்துரையாட உள்ளார். இதுதவிர, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை, புதுச்சேரி உள்ளிட்ட 15 மத்திய சிறைகளில் ஈஷா சார்பில் 2,000-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு நாளை யோகா கற்றுக்கொடுக்கப்பட உள்ளது. இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறை கைதிகளுக்கு ஈஷா சார்பில் யோகா கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈஷா யோகா மையம் சார்பில் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, உலகம் முழுவதும் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்தாண்டு இந்தியா, அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, ரஷ்யா, ஆப்ரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 1,500 இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைபெற உள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் யோகா வகுப்புகள் நடைபெற உள்ளன. இதில், ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை கடந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், இந்திய ராணுவ வீரர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் என பலத் தரப்பைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு யோகா ஆசிரியர்கள் மூலம் ‘உப-யோகா’ என்ற யோகா பயிற்சி சொல்லிக் கொடுக்கப்பட உள்ளது.
இதன் ஒருபகுதியாக, அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஃப்ளோட்டிங் டாக் எனப்படும் இந்திய கடற்படையின் மிதக்கும் துறைமுகத்தில் யோகா தின நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இதில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குமற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தலைமையகத்தின் தலைமை தளபதி, கடற்படை உதவி தலைவர் பிமல் வர்மா பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில், இந்திய தரைப்படை, கடற்படை, விமானப் படை மற்றும் கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் உட்பட சுமார் 1000 பேருக்கு யோகா கற்றுக்கொடுக்கப்பட உள்ளது.
இதை தொடர்ந்து, பிற்பகலில் ராணுவ அதிகாரிகளுடன் சத்குரு கலந்துரையாட உள்ளார். இதுதவிர, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை, புதுச்சேரி உள்ளிட்ட 15 மத்திய சிறைகளில் ஈஷா சார்பில் 2,000-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு நாளை யோகா கற்றுக்கொடுக்கப்பட உள்ளது. இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறை கைதிகளுக்கு ஈஷா சார்பில் யோகா கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.