கோவை : கோவையில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவரின் இல்லத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
கோவை : கோவையில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவரின் இல்லத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

குனியமுத்தூர் சாந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் சினோஜ் (35). இவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அசாருதீனிடம் விசாரணை மேற்கொண்டதின் அடிப்படையில், இன்று சுமார் ஒரு மணி நேரம் தீவிர சோதனை நடத்தினர். அதேபோல, அசாருதீனை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின்போது, மாநகர காவல் துறையினரும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுடன் இருந்தனர். மேலும், அதிகாரிகள் நடத்திய சோதனையில் இரண்டு ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் அசாருதீனை மீண்டும் அழைத்துச் சென்று விட்டனர். திடீரென குடியிருப்புக்குள் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனைக்காக நுழைந்தது குனியமுத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.