கோவை : பேரூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள செல்வ சிந்தாமணி குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து வந்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை : பேரூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள செல்வ சிந்தாமணி குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து வந்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பேரூர் மெயின் ரோட்டில் உள்ள செட்டிவீதி அருகே உள்ள செல்வ சிந்தாமணி குளத்தில் பயங்கரமான துர்நாற்றம் வீசியது. இதனால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதையடுத்து, குளக்கரையின் அருகே சென்று பார்த்த போது, குளத்தின் கரைப் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்து கிடந்தன. குளத்தின் தண்ணீரில் நிலவிய ஆக்சிஜன் பற்றாக்குறையினால் மீன்கள் இறந்ததாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

பேரூர் மெயின் ரோட்டில் உள்ள செட்டிவீதி அருகே உள்ள செல்வ சிந்தாமணி குளத்தில் பயங்கரமான துர்நாற்றம் வீசியது. இதனால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதையடுத்து, குளக்கரையின் அருகே சென்று பார்த்த போது, குளத்தின் கரைப் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்து கிடந்தன. குளத்தின் தண்ணீரில் நிலவிய ஆக்சிஜன் பற்றாக்குறையினால் மீன்கள் இறந்ததாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.