திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே பகுதியில் இரு வீட்டின் கதவுகளை உடைத்து 36 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே பகுதியில் இரு வீட்டின் கதவுகளை உடைத்து 36 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மகாலட்சுமி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா. எல்.ஐ.சி. முகவரான இவருக்கு கவிதா என்ற மனைவியும், கார்த்தி என்ற மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களாக ராஜேஷ் கண்ணாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் பல்லடம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், இன்று அவரது மகன் கல்லூரிக்குச் சென்றிருந்த பொழுது, அருகிலிருந்தவர்கள் வீட்டின் கதவு திறந்திருப்பதைப் பார்த்து மருத்துவமனையில் இருந்த கவிதாவுக்கு தகவல் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, வீட்டிற்கு வந்த அவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதையும், பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 30 சவரன் நகை மற்றும் ரூ. 5,000 பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர், உடனடியாக பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
இதேபோல, இன்று துரைசாமி நகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. பட்டப்பகலில் பல்லடம் பகுதியில் நடைபெற்ற இச்சம்பவங்களால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மகாலட்சுமி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா. எல்.ஐ.சி. முகவரான இவருக்கு கவிதா என்ற மனைவியும், கார்த்தி என்ற மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களாக ராஜேஷ் கண்ணாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் பல்லடம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், இன்று அவரது மகன் கல்லூரிக்குச் சென்றிருந்த பொழுது, அருகிலிருந்தவர்கள் வீட்டின் கதவு திறந்திருப்பதைப் பார்த்து மருத்துவமனையில் இருந்த கவிதாவுக்கு தகவல் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, வீட்டிற்கு வந்த அவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதையும், பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 30 சவரன் நகை மற்றும் ரூ. 5,000 பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர், உடனடியாக பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
இதேபோல, இன்று துரைசாமி நகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. பட்டப்பகலில் பல்லடம் பகுதியில் நடைபெற்ற இச்சம்பவங்களால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.