திருப்பூர் : திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவர்கள் இருபிரிவாக பிரிந்து தாக்கிக் கொண்ட சம்பவத்தில், மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் : திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவர்கள் இருபிரிவாக பிரிந்து தாக்கிக் கொண்ட சம்பவத்தில், மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள டவுன்ஹால் பேருந்து நிறுத்தத்தில் இருந்தே தினந்தோறும் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று வழக்கம்போல, பேருந்து நிறுத்தம் அருகே பள்ளி மாணவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து கற்கள் மற்றும் ரீப்பர் கட்டைகளைக் கொண்டு தாக்கிக் கொண்டனர்.

இந்த தாக்குதலில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கெளதம் தலையில் பலத்த ஏற்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள டவுன்ஹால் பேருந்து நிறுத்தத்தில் இருந்தே தினந்தோறும் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று வழக்கம்போல, பேருந்து நிறுத்தம் அருகே பள்ளி மாணவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து கற்கள் மற்றும் ரீப்பர் கட்டைகளைக் கொண்டு தாக்கிக் கொண்டனர்.

இந்த தாக்குதலில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கெளதம் தலையில் பலத்த ஏற்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.