நீலகிரி : குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த இடியுடன் கூடிய கனமழையினால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
நீலகிரி : குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த இடியுடன் கூடிய கனமழையினால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படும். இந்த மழை உதகையில் தாக்கத்தை அதிகம் ஏற்படுத்தும். இந்த நிலையில், குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்தாண்டு இன்னும் தென்மேற்கு பருவ மழை சரியாக பெய்யாத நிலையில், கடந்த சில தினங்களாக உதகை மற்றும் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் வெயிலின் தாக்கம் காணப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இன்று மாலை திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், சாலைகளிலும், ஓடைகளிலும் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. தொடர்ந்து, கனமழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படும். இந்த மழை உதகையில் தாக்கத்தை அதிகம் ஏற்படுத்தும். இந்த நிலையில், குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்தாண்டு இன்னும் தென்மேற்கு பருவ மழை சரியாக பெய்யாத நிலையில், கடந்த சில தினங்களாக உதகை மற்றும் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் வெயிலின் தாக்கம் காணப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இன்று மாலை திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், சாலைகளிலும், ஓடைகளிலும் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. தொடர்ந்து, கனமழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.