குன்னூர் பேருந்து நிலையம் அருகில் ஓடும் ஆற்றினை தூய்மையாக வைக்க ஆட்சியர் உத்தரவு

நீலகிரி : குன்னூர் பேருந்து நிலையம் அருகில் ஓடும் ஆற்றினை தூய்மையாக வைக்கவும், மீறி குப்பைகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

நீலகிரி : குன்னூர் பேருந்து நிலையம் அருகில் ஓடும் ஆற்றினை தூய்மையாக வைக்கவும், மீறி குப்பைகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

கிளீன் குன்னூர் அமைப்பு சார்பில் பேருந்து நிலையத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் மற்றும் அங்கு படிந்திருந்த அழுக்குகளைத் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார். 

அப்போது ஆட்சியர் பேசியதாவது :- குன்னூர் மக்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம் இந்த ஆறு, இதனை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். மேலும், இவற்றில் குப்பைகள் மற்றும் கழிவுகளைக் கொட்டக் கூடாது. இந்த ஆற்று நீரை சமவெளிப் பகுதிகளில் குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே, இந்த ஆற்றில் குப்பைகள் மற்றும் கழிவுகளைக் கொட்டினால், கண்காணிப்பு கேமராவின் பதிவைக் கொண்டு ரூ. 5,000 முதல் ரூ. 10, 000 வரை அபராதம் விதிக்கப்படுவதுடன், கடையின் உரிமம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றார். 

மேலும், ஆற்றை தூய்மை செய்த தனியார் தொண்டு நிறுவனத்துடன் சென்று ஆற்றுப்படுகையை பார்வையிட்ட ஆட்சியர்,   மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள கடை உரிமையாளர்களிடம் கடைகளை நடைபாதையில் வைக்கக் கூடாது என்றும், மீறி வைத்தால் நகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படும், என எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அரசு அதிகாரிகள், கிளீன் குன்னூர் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த சமந்தா, நிர்வாகிகள் டாக்டர் வசந்தன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர், வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜாமபந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்டங்களை வழங்கினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...