கோவை : ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள மாநகராட்சி முதியோர் தங்கும் விடுதியில் அடிப்படை வசதிகள் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறதா..? என அங்கு தங்கியுள்ள முதியோர்களிடம் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
கோவை : ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள மாநகராட்சி முதியோர் தங்கும் விடுதியில் அடிப்படை வசதிகள் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறதா..? என அங்கு தங்கியுள்ள முதியோர்களிடம் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் ஒரு பகுதியாக, ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள மாநகராட்சி முதியோர் தங்கும் விடுதியில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படுகிறதா..? என அங்குள்ள முதியவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
பின்னர், கோவை மாநகராட்சி உக்கடம் பெரியகுளத்தின் கரைகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார். தொடர்ந்து, கோவை மாநகராட்சி வாலாங்குளம் பகுதியிலுள்ள மேம்பாலத்தின் அடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர், பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, நகர்நல அலுவலர் மரு.கே. சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் செந்தில் குமார் ரத்தினம், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் ஒரு பகுதியாக, ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள மாநகராட்சி முதியோர் தங்கும் விடுதியில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படுகிறதா..? என அங்குள்ள முதியவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
பின்னர், கோவை மாநகராட்சி உக்கடம் பெரியகுளத்தின் கரைகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார். தொடர்ந்து, கோவை மாநகராட்சி வாலாங்குளம் பகுதியிலுள்ள மேம்பாலத்தின் அடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர், பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, நகர்நல அலுவலர் மரு.கே. சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் செந்தில் குமார் ரத்தினம், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
