திருப்பூர் : 1970-ம் ஆண்டு அரசுக்கெதிரான போராட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த விவசாயிகளுக்கு திருப்பூரில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் : 1970-ம் ஆண்டு அரசுக்கெதிரான போராட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த விவசாயிகளுக்கு திருப்பூரில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

1970-ம் ஆண்டு தமிழக அரசுக்கு எதிராக விவசாய சங்கக் கட்சியினர் சார்பில் மின் உயர்வைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் விவசாயிகள் தங்களது உயிர்களை நீத்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 49-ம் ஆண்டு வீர வணக்க நிகழ்வானது, திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த கணக்கம்பாளையம் பகுதியில் நடைபெற்றது.

இதில், கட்சி சார்பற்ற விவசாய சங்கம், உழவர் உழைப்பாளர் கட்சி, அவிநாசி அத்திக்கடவு போராட்டக் குழு கூட்டமைப்பினர், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு உயிர் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

1970-ம் ஆண்டு தமிழக அரசுக்கு எதிராக விவசாய சங்கக் கட்சியினர் சார்பில் மின் உயர்வைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் விவசாயிகள் தங்களது உயிர்களை நீத்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 49-ம் ஆண்டு வீர வணக்க நிகழ்வானது, திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த கணக்கம்பாளையம் பகுதியில் நடைபெற்றது.

இதில், கட்சி சார்பற்ற விவசாய சங்கம், உழவர் உழைப்பாளர் கட்சி, அவிநாசி அத்திக்கடவு போராட்டக் குழு கூட்டமைப்பினர், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு உயிர் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.