ஸ்டாலினுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றார் அமைச்சர் வேலுமணி

சென்னை : மக்களவை தேர்தலில் தன் மீது ஊழல் குற்றச்சாட்டுச் சுமத்தி ஸ்டாலின் பிரச்சாரம் செய்வதற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திரும்பப் பெற்றார்.


சென்னை : மக்களவை தேர்தலில் தன் மீது ஊழல் குற்றச்சாட்டுச் சுமத்தி ஸ்டாலின் பிரச்சாரம் செய்வதற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திரும்பப் பெற்றார். 

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்கட்டமைப்புப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்குவதாகவும், உள்ளாட்சி அமைப்புகளில் ஊழல் திளைத்துக் கொண்டிருப்பதால் உள்ளாட்சித் துறை அமைச்சரான எஸ்.பி. வேலுமணி பதவி விலக வேண்டும் என்று மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேசி வந்தார். தன்னை அவமதிக்கும் விதமாக இதுபோன்று பேச ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர். சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டாலினுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை திரும்பப் பெறுவதாக அமைச்சர் வேலுமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...