கோவை: கோவையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் கோவை மாநகராட்டி நிர்வாகம் மும்முரம் காட்டி வரும் நிலையில், அடுத்ததாக முத்தண்ணன் குள ஆக்கிரமிப்புகளை அகற்ற திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை: கோவையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் கோவை மாநகராட்டி நிர்வாகம் மும்முரம் காட்டி வரும் நிலையில், அடுத்ததாக முத்தண்ணன் குள ஆக்கிரமிப்புகளை அகற்ற திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள குடியிருப்புகளை அகற்றும் பணிகளை கடந்த 2 ஆண்டுகளாக கோவை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், விரைவில் முத்தண்ணன் குள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சில குடியிருப்புகள் அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, எஞ்சிய வீடுகளை பல்வேறு கட்டங்களாக அகற்ற முடிவு செய்யப்பட்டது. மேலும், விரைவில் ஆக்கிரமிப்புகளில் இருப்பவர்களுக்கு, ஒதுக்கப்பட்டு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு இடம்பெயருமாறு நோட்டீஸ் அளிக்கப்பட உள்ளது.

ஆக்கிரமிப்புகளை அகற்றி வெளியேற்றப்படும் பொதுமக்களுக்கு மலுமிச்சம்பட்டி, கோவைபுதூர் மற்றும் கீரணத்தம் ஆகிய பகுதிகளில் தமிழக குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வெள்ளலூர் தொட்டி, பேரூர் பெரிய குளம், ராஜவாய்க்கால் மற்றும் உக்கடம் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் ஏற்கனவே வெற்றிகரமாக அகற்றப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.