மூளைக் காய்ச்சலுக்கு கோவையில் இளம்பெண் பலி : பீகாரைத் தொடர்ந்து கோவையிலும் பரவுகிறதா..?

கோவை : பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, கோவையில் இளம்பெண் ஒருவர் மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, கோவையில் இளம்பெண் ஒருவர் மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் முசாபர் நகரில் மூளை காய்ச்சல் நோய் குழந்தைகளிடையே பரவி வருகிறது. கடந்த ஜனவரியில் பரவ தொடங்கிய இந்த நோய், கோடை காலத்தில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த காய்ச்சலினால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். அதேபோல, நாடு முழுவதும் அங்கொன்றும், இங்கொன்றுமாக மூளை காய்ச்சலினால் பலியாகி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மூளைக்காய்ச்சலினால் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவரின் மகள் ரம்யா (21). இவர் கடந்த சில நாட்களாக தீவிர காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு வந்தார். இதையடுத்து, சிகிச்சைக்காக கடந்த 15-ம் தேதி ரம்யாவை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு இருந்த இவருக்கு பரிசோதனை செய்ததில், மூளைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பல்வேறு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டும் இளம் பெண் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...