திருப்பூர் : திருப்பூரில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 68 வயது முதியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருப்பூர் : திருப்பூரில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 68 வயது முதியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2018 ஆம் ஆண்டு திருப்பூர் குப்பாண்டபாளையம், ஜோதி நகர் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை விட்டிற்குள் அழைத்துச் சென்று அதே பகுதியைச் சேர்ந்த அனிபா என்ற 68 வயது முதியவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வீரபாண்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் அனிபாவை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையானது திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் அனிபாவிற்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு திருப்பூர் குப்பாண்டபாளையம், ஜோதி நகர் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை விட்டிற்குள் அழைத்துச் சென்று அதே பகுதியைச் சேர்ந்த அனிபா என்ற 68 வயது முதியவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வீரபாண்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் அனிபாவை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையானது திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் அனிபாவிற்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.