கோவையில் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை

கோவை : கோவையில் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களை நீதிமன்ற அனுமதியுடன் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை : கோவையில் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களை நீதிமன்ற அனுமதியுடன் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் கடந்த 12ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஏழுக்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் சோதனை மற்றும் விசாரணைகளை மேற்கொண்டனர். இதில், உக்கடத்தை சேர்ந்த முகமது அசாருதீன் (32), போத்தனூர் திருமறை நகரைச் சேர்ந்த அக்ரம் ஜிந்தா (26), தெற்கு உக்கடத்தை சேர்ந்த ஷேக் இதாயத்துல்லா (38), குனியமுத்தூரை சேர்ந்த அபுபக்கர் (29), போத்தனூர் உமர் நகரை சேர்ந்த சதாம் உசேன் (26), தெற்கு உக்கடத்தை சேர்ந்த இப்ராஹிம் என்ற ஷாகிம்ஷா (28) ஆகிய 6 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு, தென் மாநிலங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடத்த அந்த அமைப்புக்கு இளைஞர்களை திரட்டியதாகவும், அந்த அமைப்புக்காக நிதி திரட்டியதாகவும் முகமது அசாருதீனை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.

அதை தொடர்ந்து, மற்றொரு நபரான ஷேக் இதாயத்துல்லாவுக்கு தடை செய்யப்பட்ட ஸ்டூடன்ட் இஸ்லாமிக் மூவ்மென்ட் ஆப் இந்தியா (சிமி) அமைப்புடன் தொடர்பு இருப்பதாக விசாரணைகளை மேற்கொண்டு அவரையும் கடந்த 14-ம் தேதி என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், ஷேக் இதாயத்துல்லா ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கொச்சின் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நேற்று வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவரையும் வரும் 22-ம் தேதி வரை 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது. 

இதை தொடர்ந்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த விசாரணைகளின் முடிவில் இருவரின் முழு விவரங்கள் வெளியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...