நீலகிரி : கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி முதியவர் காயமடைந்த நிலையில், வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் தவறிவிட்டதாகக் கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நீலகிரி : கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி முதியவர் காயமடைந்த நிலையில், வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் தவறிவிட்டதாகக் கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா பாட்டவயல் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் மொய்தீன் என்பவரை காட்டு யானை தாக்கியுள்ளது. காலை நேரத்தில் பள்ளிக்கு தொழுகைக்காக சென்ற இவரை காட்டு யானை தாக்கியது. அப்போது, அருகில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பி யானையை விரட்டி விட்டு, மொய்தீனை மீட்டுள்ளனர். வயிற்றில் பலத்த காயமடைந்த அவர் அருகில் உள்ள கேரள மாநிலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

கடந்த இரண்டு மாதங்களில் இதே பகுதியில் மூன்று பேர் காட்டு யானையால் தாக்கப்பட்டதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். காட்டு யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை தவறியதாகக் கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, கேரளா - தமிழகம் இடையேயான போக்குவரத்து சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் பாதிக்கப்பட்டது. பேருந்துகள் மற்றும் ஜீப்புகள் கார்களில் வந்த பயணிகள் வாகனங்களை இயக்க முடியாமல் காத்துக் கிடந்தனர்.
போராட்டத்தின் போது, ஊருக்குள் யானைகள் வருவதை கட்டுப்படுத்த வேண்டும், அகழிகளை முறையாக பராமரித்து ஆழப்படுத்தி பாதுகாக்க வேண்டும், உரிய இடங்களில் மின்வேலி அமைக்க வேண்டும், ஊருக்குள் புகுந்து பொதுமக்களை தாக்கும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி, கூடலூர் கோட்ட வன அலுவலர் சோமன் சுரேஷ் உள்ளிட்டோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிதையடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா பாட்டவயல் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் மொய்தீன் என்பவரை காட்டு யானை தாக்கியுள்ளது. காலை நேரத்தில் பள்ளிக்கு தொழுகைக்காக சென்ற இவரை காட்டு யானை தாக்கியது. அப்போது, அருகில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பி யானையை விரட்டி விட்டு, மொய்தீனை மீட்டுள்ளனர். வயிற்றில் பலத்த காயமடைந்த அவர் அருகில் உள்ள கேரள மாநிலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

கடந்த இரண்டு மாதங்களில் இதே பகுதியில் மூன்று பேர் காட்டு யானையால் தாக்கப்பட்டதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். காட்டு யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை தவறியதாகக் கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, கேரளா - தமிழகம் இடையேயான போக்குவரத்து சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் பாதிக்கப்பட்டது. பேருந்துகள் மற்றும் ஜீப்புகள் கார்களில் வந்த பயணிகள் வாகனங்களை இயக்க முடியாமல் காத்துக் கிடந்தனர்.
போராட்டத்தின் போது, ஊருக்குள் யானைகள் வருவதை கட்டுப்படுத்த வேண்டும், அகழிகளை முறையாக பராமரித்து ஆழப்படுத்தி பாதுகாக்க வேண்டும், உரிய இடங்களில் மின்வேலி அமைக்க வேண்டும், ஊருக்குள் புகுந்து பொதுமக்களை தாக்கும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி, கூடலூர் கோட்ட வன அலுவலர் சோமன் சுரேஷ் உள்ளிட்டோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிதையடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.