மாணவியின் உயிரிழப்பிற்கு சித்த மருத்துவர்தான் காரணம் எனப் பொய்யான தகவல்கள் பரப்புவதாக கோவை ஆட்சியரிடம் மனு

கோவை : கோவையில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவத்திற்கு சித்த மருத்துவர் தான் காரணம் என பொய்யான தகவல் பரப்பி வருவதாகவும், சித்த மருத்துவ தொழிலில் சுதந்திரம் வேண்டியும் சித்தமருத்துவர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை : கோவையில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவத்திற்கு சித்த மருத்துவர் தான் காரணம் என பொய்யான தகவல் பரப்பி வருவதாகவும், சித்த மருத்துவ தொழிலில் சுதந்திரம் வேண்டியும் சித்தமருத்துவர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன் சத்யப்பிரியா (20) என்ற கோவை அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவி உடல் நலப் பிரச்சினையின் காரணமாக உயரிழந்தார். மாணவியின் இறப்பிற்கு செல்வபுரம் மனோன்மணி சித்த வைத்திய சாலை என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வரும் சித்த மருத்துவர் குருநாதன் தான் காரணம் என குற்றம் சாட்டிய மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோவை சித்த மருத்துவர்கள் சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். 



அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- தங்களது சங்கம் கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. உயிரிழந்த மாணவி கடந்த ஒரு வருடகாலமாகவே இந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் சித்தமருத்துவரை நாடிய அந்த மாணவிக்கு உரிய தரச்சான்று பெற்ற மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. மாணவிக்கு ஆங்கில மருந்துகள் உட்கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், இந்த சம்பவத்தில் மாணவியின் உயிரிழப்புக்கு சித்தமருத்துவமோ, மருத்துவரோ காரணமல்ல. சித்த மருத்துவத்தின் மீது பொய்யான தகவல் பரப்பி வருகின்றனர். தமிழகத்தில் பாரம்பரிய சித்த மருத்துவர்கள் தொழில் சுதந்திரத்துடன் தொழில் புரிய பாதுகாப்பு செய்து தர வேண்டும், என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...