நீலகிரியில் 440 குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை எனக் கணக்கெடுப்பில் தகவல்

நீலகிரி : அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 54 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 440 பள்ளி செல்லா குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


நீலகிரி : அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 54 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 440 பள்ளி செல்லா குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பில் மாவட்டம் முழுவதும் 6 வயது முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணியானது கடந்த ஏப்ரல் 8 முதல் தொடங்கி மே மாத இறுதி வரை நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1,578 குடியிருப்புகளில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடந்தது. பள்ளியில் பயிலும் வயது வந்தும் பள்ளி செல்லாத, இடைநின்ற மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனர். இக்கணக்கெடுப்பில், நீலகிரி மாவட்டத்தில் 440 பள்ளி செல்லா குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி அம்பிகாபதி கூறுகையில், "கணக்கெடுப்பில் பழங்குடியின குழந்தைகள், தாழ்த்தப்பட்ட குழந்தைகள் மற்றும் ஒரிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், அசாம் ஆகிய வடமாநிலங்களைச் சேர்ந்த 110 மாணவ, மாணவியர்கள் என மாவட்டம் முழுவதும் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள 440 பள்ளி செல்லா குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பில் கண்டறியப்படும் பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அனைவரும் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி வயதிற்கேற்ற வகுப்பில் நேரடிச் சேர்க்கை மூலமாகவும் மற்றும் இணைப்பு சிறப்பு பயிற்சி மையங்களிலும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," என தெரிவித்துள்ளார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...