கோவை : பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேரின் நீதிமன்ற காவலை ஜூலை 1-ம் தேதி வரை நீட்டித்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
கோவை : பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 5 பேரின் நீதிமன்ற காவலை ஜூலை 1-ம் தேதி வரை நீட்டித்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அரங்கேறிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் இன்று நீதிமன்றம் ஜூலை 1-ம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் வீடியோ கான்பிரன்ஸ் முறையில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.