கோவை : பொள்ளாச்சி எம்.பி. குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களைப் பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தி.மு.க. வழக்கறிஞர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
கோவை : பொள்ளாச்சி எம்.பி. குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களைப் பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தி.மு.க. வழக்கறிஞர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
பொள்ளாச்சி தி.மு.க., எம்.பி. சண்முகசுந்தரம் மீது சமூக வலைத்தளங்களில் நில அபகரிப்பு தொடர்பான புகார்கள் பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ள தி.மு.க.வின் வழக்கறிஞர் பிரிவினர், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது :- தி.மு.க.வின் பெயரை வேண்டுமென்றே திட்டமிட்டு கலங்கப்படுத்தும் விதமாக, அவதூறு பரப்பும் நோக்கில் சிலர் செயல்படுகின்றனர். மேலும், நில அபகரிப்பில் மீண்டும் தி.மு.க.வினர் என்றும், தி.மு.க., எம்.பி. சண்முகசுந்தரத்தின் உறவினர் அடாவடி என்றும் எஸ்.ஜி. சூர்யா என்பவர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்.
அதேபோல், பொள்ளாச்சி அருகே வாய்க்காலில் ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறி ஊடகங்களில் தி.மு.க.வை அவதூறாக பரப்பி வருகின்றனர். இப்படி கார்த்திக் மற்றும் எஸ்.ஜி. சூர்யா ஆகிய இருவரும் தி.மு.க.விற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், ஆதாரமற்ற பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதால், அவர்களின் சமூகவலைதள கணக்கை முடக்கி, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
பொள்ளாச்சி தி.மு.க., எம்.பி. சண்முகசுந்தரம் மீது சமூக வலைத்தளங்களில் நில அபகரிப்பு தொடர்பான புகார்கள் பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ள தி.மு.க.வின் வழக்கறிஞர் பிரிவினர், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது :- தி.மு.க.வின் பெயரை வேண்டுமென்றே திட்டமிட்டு கலங்கப்படுத்தும் விதமாக, அவதூறு பரப்பும் நோக்கில் சிலர் செயல்படுகின்றனர். மேலும், நில அபகரிப்பில் மீண்டும் தி.மு.க.வினர் என்றும், தி.மு.க., எம்.பி. சண்முகசுந்தரத்தின் உறவினர் அடாவடி என்றும் எஸ்.ஜி. சூர்யா என்பவர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்.
அதேபோல், பொள்ளாச்சி அருகே வாய்க்காலில் ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறி ஊடகங்களில் தி.மு.க.வை அவதூறாக பரப்பி வருகின்றனர். இப்படி கார்த்திக் மற்றும் எஸ்.ஜி. சூர்யா ஆகிய இருவரும் தி.மு.க.விற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், ஆதாரமற்ற பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதால், அவர்களின் சமூகவலைதள கணக்கை முடக்கி, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.