வசிப்பிடத்தை காலி செய்தால் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் : குழந்தைகளுடன் வந்து மனு அளித்த ஜீவா நகர் பகுதி பொதுமக்கள்

கோவை : அதிகாரிகளின் வற்புறுத்தலின் பேரில், வசிப்பிடத்தை காலி செய்தால் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குக் குழந்தைகளுடன் வந்து ஜீவா நகர் பகுதி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : அதிகாரிகளின் வற்புறுத்தலின் பேரில், வசிப்பிடத்தை காலி செய்தால் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குக் குழந்தைகளுடன் வந்து ஜீவா நகர் பகுதி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

கோவை - மேட்டுப்பாளையம் சாலை அருகே உள்ள ஜீவா நகரில் கடந்த 40 ஆண்டுகளாக 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 1988-ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியம் ஜீவா நகர் பகுதியை தத்தெடுத்து ஓட்டு வீடுகள் கட்டுவதற்கு கடன் வழங்கியுள்ளது. இந்த நிலத்திற்கான கிரையத்தொகை மற்றும் குத்தகை தவணை தொகைகளை கடந்த 30 ஆண்டுகளாக செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஜீவா நகரில் இருக்கும் வீடுகளை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் குடிசை மாற்று வாரியம், மாவட்ட ஆட்சியர், கோவை மாநகராட்சியை எதிர் மனுதாரராக சேர்த்துள்ளனர். 



இதனையடுத்து, இப்பகுதியில் இருப்பவர்களை காலி செய்யக்கோரி மாநகராட்சி மற்றும் நகரமைப்பு துறையினர் வாய்மொழியாக மிரட்டுவதாகவும், ஜீவா நகரில் வசிக்கும் 204 பேருக்கும் இருக்கின்ற இடத்தை கிரையம் செய்து கொடுக்க சட்டரீதியான நடவடிக்கையைக் குடிசை மாற்று வாரியம் மேற்கொள்ள வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அதிகாரிகள் தங்களது பகுதியில் மின் இணைப்புகளை துண்டித்து விட்டதாகவும், வசிப்பிடத்தை காலி செய்ய சொல்லி அதிகாரிகள் தொடர்ந்து வற்புறுத்துவதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் எனக் கூறி பள்ளி குழந்தைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...