கோவை : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் மேட்டுப்பாளையம் - தேக்கம்பட்டி சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் மேட்டுப்பாளையம் - தேக்கம்பட்டி சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி மேட்டுப்பாளையம் - புஜங்கனூர் சாலையில் உள்ள தேக்கம்பட்டியில் காலிக்குடங்களுடன் பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது, பவானி ஆறு அருகில் இருந்தும் அதிலிருந்து சீரான முறையில் தண்ணீர் எடுத்து விநியோகம் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியமாக நடந்துகொள்வதாகக் கூறும் கிராம மக்கள், தண்ணீர் குழாய்களில் உடைப்புகள் ஏற்பட்டால் உடனடியாக சீரமைக்காமல் காலம்தாழ்த்தி வருவதால், குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாவதாக குற்றம்சாட்டினர். இது குறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக பதில் கூறுவதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு வந்த காரமடை போலீசார் மற்றும் காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்களை முற்றுகையிட்ட மக்கள் குடிக்கத் தண்ணீர் இன்றி கிராம மக்கள் அவதிப்படுவதாகப் புகார் அளித்தனர். பின்னர், ஊராட்சி செயலாளரை அழைத்து விசாரணை நடத்திய வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி, பிரச்சனைக்கு உரிய பகுதிகளில் உள்ள குறைகளைக் கலைந்து சீரான குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். பின்னர், போராட்டம் கைவிடப்பட்டது. பொதுமக்கள் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி மேட்டுப்பாளையம் - புஜங்கனூர் சாலையில் உள்ள தேக்கம்பட்டியில் காலிக்குடங்களுடன் பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது, பவானி ஆறு அருகில் இருந்தும் அதிலிருந்து சீரான முறையில் தண்ணீர் எடுத்து விநியோகம் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியமாக நடந்துகொள்வதாகக் கூறும் கிராம மக்கள், தண்ணீர் குழாய்களில் உடைப்புகள் ஏற்பட்டால் உடனடியாக சீரமைக்காமல் காலம்தாழ்த்தி வருவதால், குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாவதாக குற்றம்சாட்டினர். இது குறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக பதில் கூறுவதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு வந்த காரமடை போலீசார் மற்றும் காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்களை முற்றுகையிட்ட மக்கள் குடிக்கத் தண்ணீர் இன்றி கிராம மக்கள் அவதிப்படுவதாகப் புகார் அளித்தனர். பின்னர், ஊராட்சி செயலாளரை அழைத்து விசாரணை நடத்திய வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி, பிரச்சனைக்கு உரிய பகுதிகளில் உள்ள குறைகளைக் கலைந்து சீரான குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். பின்னர், போராட்டம் கைவிடப்பட்டது. பொதுமக்கள் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.