திருப்பூர் : கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு அதிக கட்டணம் கோரும் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து மாணவர்களுடன் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் : கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு அதிக கட்டணம் கோரும் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து மாணவர்களுடன் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள விகாஸ் வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பயின்று வரும் குழந்தைகள் யு.கே.ஜி. முடித்து முதலாம் வகுப்பில் சேர உள்ளனர். அவர்களிடம் கல்வி கட்டணமாக, ரூ. 47,000 கேட்பதாகவும், புத்தகங்கள் தர பள்ளியின் நிர்வாகம் மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அரசு சலுகைகளை வழங்கினாலும், தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகப் பணம் வசூலிப்பதைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 13 குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து விசாரித்து விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததையடுத்து, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கலைந்து சென்றனர்.

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள விகாஸ் வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பயின்று வரும் குழந்தைகள் யு.கே.ஜி. முடித்து முதலாம் வகுப்பில் சேர உள்ளனர். அவர்களிடம் கல்வி கட்டணமாக, ரூ. 47,000 கேட்பதாகவும், புத்தகங்கள் தர பள்ளியின் நிர்வாகம் மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அரசு சலுகைகளை வழங்கினாலும், தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகப் பணம் வசூலிப்பதைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 13 குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து விசாரித்து விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததையடுத்து, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கலைந்து சென்றனர்.