கல் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை : கல் குவாரி அமைவதை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை : கல் குவாரி அமைவதை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேட்டுபாளையம் வட்டம் காரமடை ஒன்றியம் முடுதுறை கிராமத்தில் 435 கல் குவாரிகள் அமைக்க அனுமதி கோரி விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது குறித்து அவர்கள் கூறியதாவது :- இப்பகுதிகளில், ஏற்கனவே கல்குவாரிகள் இயங்கி வரும் காரணத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், மேலும் கல்குவாரிகளுக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், விவசாயம் முற்றிலும் அழிந்து விடும் சூழல் ஏற்படும். மேலும், குடியிருப்பு பகுதிகளில் கல்குவாரிகள் இயங்குவதால் வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேற்படி கிராமத்தில் குடியிருப்பு அதிகமாகி வரும் நிலையில், அங்கு வசிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் கல்குவாரிகள் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது, என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...