குன்னூர் அருகே ரயில்பாதையில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நீலகிரி : குன்னூர் அருகே ரன்னிமேடு ரயில் பாதையில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானைகளை பர்லியார் வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

நீலகிரி : குன்னூர் அருகே ரன்னிமேடு ரயில் பாதையில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானைகளை பர்லியார் வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் பாதையில் ரன்னிமேடு பகுதியில் குட்டியுடன் 9 காட்டு யானைகள் கடந்த இரண்டு தினங்களாக உலா வந்துக் கொண்டிருந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் நேரில் சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அங்கு பலாப்பழம், பேரிக்காய், மூங்கில் போன்ற உணவு பொருட்கள் அதிகம் கிடைப்பதால், இவை தொடர்ந்து இங்கேயே முகாமிட்டிருந்தன. இந்த யானைகள் முக்கிய சாலைகளுக்கு வந்து விடாமல் தடுக்க 4 பேர் கொண்ட வனக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.



இந்த நிலையில், இவற்றை பர்லியார் வனப்பகுதிக்குள் துரத்தும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். தண்டவாளங்களில் ஒலி எழுப்பியவாறு இந்த யானைகளை துரத்தும் பணியினை மேற்கொண்டனர். இதன் தொடர்சியாக இவை பர்லியார் வனப் பகுதிக்குள் விரட்டப்பட்டன. ரன்னிமேடு ரயில் நிறுத்தம் மற்றும் குடியிருப்பு அருகில் சுற்றித்திரிந்த இந்த யானை கூட்டம் இங்கிருந்து திரும்பி சென்றதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...