நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியரும், நவீன நீலகிரியை உருவாக்கியவருமான ஜான் சலீவனின் 231-வது பிறந்தநாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியரும், நவீன நீலகிரியை உருவாக்கியவருமான ஜான் சலீவனின் 231-வது பிறந்தநாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
200 ஆண்டுகளுக்கு முன் கோவை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த ஜான் சலீவன் முதன் முதலாக கோவை மாவட்டத்திலிருந்து சிறுமுகை வனப்பகுதியின் வழியாக கோத்தகிரி பகுதிக்கு சென்றார். பின் அங்குள்ள மக்களை சந்தித்து இவர்கள் மலை மீது வாழ்வதை அரசுக்குத் தெரிவித்தார்.

அதன் பின், நீலகிரி மாவட்டம் கோவை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு, இவ்விரு மாவட்டத்திற்கும் ஆட்சியராக ஜான் சலீவன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், நீலகிரி மாவட்டத்தில் ஆட்சியராகப் பொறுப்பேற்ற பின், நீலகிரி மாவட்ட விவசாயிகளின் பல்வேறு வளர்ச்சிகளுக்கு காரணமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் ஜான் சலீவனின் 231-வது பிறந்தநாள் விழா கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு கிராமத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் கோட்டாட்சியர் ரஞ்சித் சிங் ஆகியோர் கலந்து கொண்டு, அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.