கோவையில் யானை தாக்கியதில் மூதாட்டி பலி : முதற்கட்டமாக 50 ஆயிரம் நிவாரணம்

கோவை : கோவை சாடிவயல் அருகே காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவை சாடிவயல் அருகே காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சாடிவயல் அடுத்த போட்டபடி ஆதிவாசிகள் கிராமத்தை சேர்ந்த நஞ்சம்மாள் என்பவர் நேற்று இரவு இயற்கை உபாதைகளை கழிக்க வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். அப்போது, திடீரென எதிரே வந்த ஒற்றை காட்டு யானை அவரை தாக்கி தூக்கி வீசி உள்ளது. இதில், காலில் பலத்த காயம் அடைந்த அவர் சத்தம் எழுப்பி உள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த கிராம மக்கள் உடனடியாக வந்து யானையை விரட்டி அவரை மீட்டனர். இதனையடுத்து, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே நஞ்சம்மாள் உயிரிழந்தார். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. யானை தாக்கி நஞ்சம்மாள் உயிரிழந்ததால், முதல் கட்டமாக வனத்துறையினர் அவரின் இறுதிச் சடங்கிற்கு 50,000 ரூபாய் பணத்தை அவரது உறவினர்களிடம் வழங்கியுள்ளனர். ஆதிவாசிகள் கிராமத்தில் யானை தாக்கி மூதாட்டி இறந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர்கள் கூறுகையில், “காலம் காலமாக மலைப் பகுதியில் குடியிருந்து வரும் தங்களுக்கு யானைகளால் பாதிப்பு ஏற்படவில்லை. தற்போது சமீப காலமாக அங்கு சுற்றித் திரியும் ஒற்றை யானையால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்ட வேண்டும்,” என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...