கோவை : கருமத்தம்பட்டி அருகே பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கடும் எதிர்ப்பை மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கான நிலம் அளவிடும் செய்யும் பணி நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கருமத்தம்பட்டி அருகே பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கடும் எதிர்ப்பை மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கான நிலம் அளவிடும் செய்யும் பணி நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருமத்தம்பட்டி அருகே மின் கோபுரம் அமைப்பதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை கருமத்தம்பட்டி பகுதியை அடுத்துள்ள செம்மாண்டம் பாளையம் பகுதியில் உயர்மின் கோபுரம் அமைக்க நில அளவை செய்யும் பணிகள் நடைபெற்றது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, அங்கு அமைக்கப்பட்டுள்ள மின்கோபுரம் ஒன்றின் மீது ஏறி போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இதையடுத்து, நில அளவீடு செய்யும் பணிகள் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்த நிலையில், இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திடீரென நில அளவீடு செய்யும் பணிகள் துவங்கப் பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல, காவல்துறையினரும் ,அதிகாரிகளும் விவசாயிகளிடம் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், நில அளவீடு செய்பவர்கள் நிலத்தை விட்டு வெளியே செல்லும் வரை பொதுமக்கள் போராட்டத்தை கை விடுவதில்லை என தெரிவித்துள்ளனர். இதனால், கருமத்தம்பட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் பதட்டமான சூழல் வருகிறது.

கருமத்தம்பட்டி அருகே மின் கோபுரம் அமைப்பதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை கருமத்தம்பட்டி பகுதியை அடுத்துள்ள செம்மாண்டம் பாளையம் பகுதியில் உயர்மின் கோபுரம் அமைக்க நில அளவை செய்யும் பணிகள் நடைபெற்றது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, அங்கு அமைக்கப்பட்டுள்ள மின்கோபுரம் ஒன்றின் மீது ஏறி போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இதையடுத்து, நில அளவீடு செய்யும் பணிகள் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்த நிலையில், இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திடீரென நில அளவீடு செய்யும் பணிகள் துவங்கப் பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல, காவல்துறையினரும் ,அதிகாரிகளும் விவசாயிகளிடம் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், நில அளவீடு செய்பவர்கள் நிலத்தை விட்டு வெளியே செல்லும் வரை பொதுமக்கள் போராட்டத்தை கை விடுவதில்லை என தெரிவித்துள்ளனர். இதனால், கருமத்தம்பட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் பதட்டமான சூழல் வருகிறது.