கோவை : ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக உக்கடம் பகுதியைச் சேர்ந்த மேலும் ஒரு நபரை என்.ஐ.ஏ. கைது செய்தது.
கோவை : ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக உக்கடம் பகுதியைச் சேர்ந்த மேலும் ஒரு நபரை என்.ஐ.ஏ. கைது செய்தது.
இலங்கையில் தேவாலயங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கும், கேரளா மற்றும் கோவையில் உள்ள சில இளைஞர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியது. மேலும், இந்த நபர்கள் கேரளா உள்பட தென்னிந்திய மாநிலங்களில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்தன. இதையடுத்து, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 6 இளைஞர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பிருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, அதில் கோவையைச் சேர்ந்த முகமது அசாரூதினுக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதை உறுதி செய்து அவரை கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, அன்பு நகரைச் சேர்ந்த ஷாஜகான், கரும்பு கடையைச் சேர்ந்த ஹபியுபுல்லா, வின்சென்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த முகமது உசேன் ஆகியோரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக உக்கடம் பகுதியைச் சேர்ந்த சேக் இதாயத்துல்லா என்பவரை என்.ஐ.ஏ. இன்று கைது செய்துள்ளது. பின்னர், அவர் எர்ணாகுளம் என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இலங்கையில் தேவாலயங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கும், கேரளா மற்றும் கோவையில் உள்ள சில இளைஞர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியது. மேலும், இந்த நபர்கள் கேரளா உள்பட தென்னிந்திய மாநிலங்களில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்தன. இதையடுத்து, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 6 இளைஞர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பிருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, அதில் கோவையைச் சேர்ந்த முகமது அசாரூதினுக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதை உறுதி செய்து அவரை கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, அன்பு நகரைச் சேர்ந்த ஷாஜகான், கரும்பு கடையைச் சேர்ந்த ஹபியுபுல்லா, வின்சென்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த முகமது உசேன் ஆகியோரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக உக்கடம் பகுதியைச் சேர்ந்த சேக் இதாயத்துல்லா என்பவரை என்.ஐ.ஏ. இன்று கைது செய்துள்ளது. பின்னர், அவர் எர்ணாகுளம் என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.