கோவை : அருணாச்சலப் பிரதேசம் அருகே விபத்தில் சிக்கிய ஏ.என். 32 ரக விமானத்தில் பயணம் செய்து பலியான கோவையை சேர்ந்தவரின் உடல் இன்று கோவை கொண்டு வரப்படுகிறது.
கோவை : அருணாச்சலப் பிரதேசம் அருகே விபத்தில் சிக்கிய ஏ.என். 32 ரக விமானத்தில் பயணம் செய்து பலியான கோவையை சேர்ந்தவரின் உடல் இன்று கோவை கொண்டு வரப்படுகிறது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று கடந்த 3-ந்தேதி 13 பேருடன் அசாமில் இருந்து புறப்பட்டது. கிளம்பிய அரைமணி நேரத்தில் அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லையோரம் மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன. இதனிடையே, கடந்த திங்களன்று அருணாச்சல பிரதேசத்தின், சியாங் மாவட்டத்தில் உள்ள கட்டி என்ற கிராமம் அருகே விமானத்தின் பாகங்கள் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, விமானத்தின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு மீட்புக்குழுவினர் சென்றனர். அப்போது, விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் ஆய்வு செய்ததில் 13 பேரில் ஒருவர் கூட பிழைக்கவில்லை என விமானப்படை உறுதி செய்தது. இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் கோவையை சேர்ந்தவரும் இருந்துள்ளார். அவரது உடல் இன்று கோவை கொண்டு வரப்படுகிறது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று கடந்த 3-ந்தேதி 13 பேருடன் அசாமில் இருந்து புறப்பட்டது. கிளம்பிய அரைமணி நேரத்தில் அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லையோரம் மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன. இதனிடையே, கடந்த திங்களன்று அருணாச்சல பிரதேசத்தின், சியாங் மாவட்டத்தில் உள்ள கட்டி என்ற கிராமம் அருகே விமானத்தின் பாகங்கள் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, விமானத்தின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு மீட்புக்குழுவினர் சென்றனர். அப்போது, விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் ஆய்வு செய்ததில் 13 பேரில் ஒருவர் கூட பிழைக்கவில்லை என விமானப்படை உறுதி செய்தது. இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் கோவையை சேர்ந்தவரும் இருந்துள்ளார். அவரது உடல் இன்று கோவை கொண்டு வரப்படுகிறது.